கோபியை அறைந்து விடும் ராதிகாவின் கணவர் ராஜேஷ், அதிர்ச்சியில் ராதிகா – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைக்களம் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் கதையில் புதிய ட்விஸ்ட் நடைபெற உள்ளதாக சீரியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. அதாவது, கோபி-ராதிகா காதலை பத்தி தெரிஞ்சவுடனே பாக்கியா அமைதியா எப்பவும் போல இருப்பாங்க அப்டினு நெனச்சா, புயல் மாதிரி டயலாக் பேசி ஒரு வழியா கோபிக்கு விவாகரத்து கொடுத்துட்டாங்க. அப்புறம் சண்டை போட்டு கோபி வீட்டை விட்டு வெளிய சென்று ஹோட்டல்ல தங்குறாரு. அப்புறம் பாக்கியா வீட்டில் இருக்க எல்லார்கிட்டயும் திட்டு வாங்கிட்டு எப்பவும் போல வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க.
ஒரு வழியா கோபிக்கும் ராதிகாவிற்க்கும் கல்யாணம் பண்ணலாம் அப்படின்னு ராதிகாவோட வீட்டில் முடிவு பண்றாங்க. இன்னொரு பக்கம் கோபி அவங்க அம்மா ஈஸ்வரியை சமாதானம் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறாரு. இதுக்கு இடையில் கோபி கல்யாணம் பண்ண போறத பத்தி தெரிஞ்சிருக்குற இனியா கோபிகிட்ட சண்டை போடுறாங்க. இதையடுத்து இனியாவிற்க்கும், ராதிகாவோட பொண்ணு மயூவுக்கும் இடையில் சண்டை வருது. இதெல்லாம் சமாளிச்சு ஒரு வழியா கோபி கல்யாணத்து ரெடியாகும் போது கதையில் முக்கியமான ட்விஸ்ட் வர இருக்கிறது.
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் கவனத்திற்கு – அதிரடி உத்தரவு!
அதாவது, ராதிகாவோட முதல் கணவர் ராஜேஷ் என்ட்ரி கொடுக்க போறாரு. கோபியும், ராஜேஷும் வெளியே ஒருத்தர ஒருத்தர் எதார்த்தமா சந்திக்கிறாங்க. உடனே ராஜேஷ், ராதிகாவை கோபி கல்யாணம் பண்ண போற விஷயத்தை பத்தி தெரிஞ்சனால சண்டை போடுறாரு. இவங்க ரெண்டு பேருக்கும் சண்டை பெருசாகி ராஜேஷ் வந்து கோபியை அடிக்கிற மாதிரி காட்சிகள் வர இருக்கிறது. இதையடுத்து கோபி மயக்கம் போட்டு கீழே விழுகிற மாதிரி ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதுக்கு அப்புறம் கோபி-ராதிகா திருமணம் நடக்குமா? பாக்கியாவோட முடிவு என்னவா இருக்கும்?அப்படினு பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. .
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்