ஈஸ்வரியால் வந்த வினை.. எழிலுக்கு வர்ஷினியுடன் நடக்கும் திருமணம் – பாவமான நிலையில் அமிர்தா!
விஜய் டிவியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான “பாக்கியலட்சுமி” சீரியலில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று வர இருக்கிறது. இந்த சீரியலின் உண்மையான வெர்சனில் அது போல கொண்டு செல்லப்பட்ட நிலையில் தமிழில் சீரியல் கதையில் என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பாக்கியலட்சுமி சீரியலின் கதைக்களம் பல திருப்பங்களுடன் தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பாக்கியாவும் கோபியும் பிரிந்துவிட்ட நிலையில், பாக்கியாவின் அருமை கோபிக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வருகிறது. மறுபக்கம் ராமமூர்த்தி கோபியை எந்த விதத்தில் கடுப்பேற்ற முடியுமோ அதை எல்லாம் செய்கிறார். அதனால் கோபி கோவத்தின் உச்சியில் இருக்கிறார். தற்போது ஜெனி கர்ப்பமாக இருப்பது போல காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றன.
Exams Daily Mobile App Download
அதனால் குடும்பத்தில் நீண்ட நாட்களுக்கு பின் சந்தோசம் வந்துள்ளது. இன்னொரு பக்கம் கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் இனியா மிகவும் வருத்தப்படுகிறார். அந்த காட்சிகள் காட்டப்படுகிறது. இந்நிலையில் எழில் அமிர்தாவை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் அவர்களுக்கு இடையே ப்ரொடியூசரின் மகள் வர்ஷினி வருவது போல காட்டப்படுகிறது. ஏற்கனவே நிலைமை சரி இல்லை என்பதால் அமிர்தாவை காத்திருக்க சொல் என பாக்கியா சொல்லி இருக்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் இந்த சீரியலின் ஓரிஜினல் வெர்சனில் எழில் அமிர்தாவை திருமணம் செய்யாமல் வர்ஷினியை தான் திருமணம் செய்து கொள்வார். மேலும் ஈஸ்வரி தற்கொலை செய்துகொள்ளவதாக மிரட்டி எழிலை சம்மதிக்க வைப்பார். ஆனால் தமிழ் ரசிகர்களுக்காக பல மாற்றங்கள் தொடரில் செய்யப்படும் நிலையில், எழில் யாரை திருமணம் செய்து கொள்வார் என்பது சீரியலின் பெரிய ட்விஸ்ட்டாக இருக்க போகிறது. உண்மையான வெர்சன் போல சீரியல் எடுக்கப்பட்டால் எழில் வர்ஷினியை திருமணம் செய்ய, அமிர்தா துறவியாக மாறுவது போல காட்டப்பட இருக்கிறது.