எழில் அமிர்தாவை வீட்டை விட்டு போக சொல்லும் ராதிகா.. கோவத்தின் உச்சியில் பாக்கியா எடுத்த முடிவு – அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபியின் மனைவி நான் தான் என பாக்கியா வீட்டில் தங்கிவிட, அதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வருகிறது. இந்நிலையில் எழில் அமிர்தாவிற்கு இடம் இல்லாமல் போக பாக்கியா கோவத்தின் உச்சிக்கு சென்று ராதிகாவிடம் சண்டை போடுவது எல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் பல சுவாரசியமான காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. இதுவரை அமைதியாக இருந்த ராதிகா இனிமேல் பொறுமையாக இருக்க முடியாது என பாக்கியாவின் வீட்டில் வந்து தங்கிவிடுகிறார். மறுபக்கம் ராதிகாவால் தான் கோபி குடிக்கிறார் என்பதால் ஈஸ்வரி அவரை வீட்டை விட்டு போக கூடாது என சொல்கிறார். அதனால் குடும்பத்தில் பெரிய பூகம்பம் வருகிறது. இந்நிலையில் ராதிகாவை எங்கே தங்க வைப்பது என பெரிய குழப்பம் வீட்டில் வருகிறது.
முல்லையின் அம்மா மற்றும் ஐஷு செய்யும் வில்லத்தனம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அவதி!
ராதிகா எழில்-அமிர்தா ரூமில் தங்க, அவர்களுக்கு இடம் இல்லாமல் இருக்கிறது. அதனால் ராதிகா அவர்களையும் வீட்டை விட்டு வெளிலே செல்ல சொல்ல, உடனே பாக்கியாவிற்கு பயங்கரமாக கோவம் வருகிறது. பாக்கியா ராதிகாவை பயங்கரமாக பேச, நான் இந்த வீட்டை வாங்க பணம் கொடுத்து இருப்பதாக சொல்கிறார். அந்த பணத்தை கொடுக்க சொல்ல பாக்கியா கெடு வைக்க ராதிகா-கோபியின் பாடு திண்டாட்டமாக இருக்கிறது. இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
Exams Daily Mobile App Download