ராதிகாவுக்காக தற்கொலை செய்யும் கோபி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!
தற்போது வரைக்குமே கோபி ராதிகாவிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், கோபி தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா மீண்டும் ஏற்றுக்கொள்ளப் போகிறாரா அல்லது மீண்டும் கோபியிடம் இருந்து ஒதுங்கி செல்ல போகிறாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது, ராதிகாவிற்கும் கோபிக்கும் எப்போது தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை பாக்கியாவிற்கு தெரிய வந்ததோ அப்பொழுதே கோபியை விட்டு விலக வேண்டும் என பாக்கியா நினைத்துவிட்டார்.
இதனால், கோபியின் விருப்பப்படியே கோபிக்கு பாக்கியா விவாகரத்து கொடுத்துவிட்டார். விவாகரத்து கொடுத்ததும் பாக்கியாவிற்கு இந்த வீட்டில் இடமில்லை என கோபி கூற உடனடியாக பாக்கியா உள்ளே சென்று கோபியின் அனைத்து துணிமணிகளையும் பேக் செய்துவிட்டு வருகிறார். இந்த வீட்டை விட்டு எந்த தவறும் செய்யாத நான் ஏன் வெளியே செல்ல வேண்டும். நீங்கள் தான் வெளியே செல்ல வேண்டும் என பாக்கியா கூற உடனடியாக கோபி இந்த வீட்டிற்காக நான் நிறைய செலவு செய்திருக்கிறேன். இதனால், இந்த வீட்டிற்காக நான் செலவு செய்த பணத்தை கொடுக்க வேண்டும் என பாக்யாவிடம் கேட்கிறார்.
தமிழகத்தில் நாளை (ஆக.23) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!
உடனடியாக பாக்கியாவும் உங்களுக்கு நான் 40 லட்ச ரூபாயை ரெடி செய்து தருகிறேன் என கூறுகிறார். பின்னர், கோபி வீட்டை விட்டு வெளியேறி நேராக ராதிகாவின் வீட்டிற்கு செல்கிறார். எனக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்து கிடைத்துவிட்டது. என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என அனைத்தையும் கூறுகிறார். இருந்தாலும் கோபியை ராதிகா ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதனால், கோபி நீ சம்மதிக்கவில்லை எனில் தற்கொலை செய்துவிடுவேன் என ராதிகாவை மிரட்டி திருமணம் செய்து கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்