திருமணத்திற்காக விஷம் குடிக்கும் கோபி, சம்மதம் தெரிவித்த ராதிகா – பரபரப்பான திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல வித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இன்று கோபி ராதிகாவிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்க விஷம் அருந்தி விடுவது போல ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது.
‘பாக்கியலட்சுமி’ சீரியல்
தமிழ் சீரியல்களில் தற்போது முக்கியமான அதே சமயம் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் யாருமே எதிர்பாராத விதமாக பாக்கியா கோபியை எதிர்த்து சண்டை போட்டு விடுகிறார். இதனால் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே அதிர்ச்சியில் இருக்கின்றனர். கோபி தன்னை பாக்கியா எதிர்த்து பேசியதால் கோபத்தில் பயங்கரமாக வார்த்தைகளை விட்டு விடுகிறார். இனி குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என்றும் கூறி விடுகிறார். இதனால் பாக்கியா மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கிறது.
இந்த நிலையில் தான், இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்று கூறி விடுகின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரையும் பார்த்து கொள்ளும்படி பாக்கியா கூறியதால் கோபி தன்னால் பீஸ் கட்ட முடியாது என்று கூறி விடுகிறார். முதலில், பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கும் இனியா, அம்மாவால் குடும்பத்தை பொருளாதார ரீதியாக பார்த்து கொள்ள முடியாது என்று தெரிந்ததும் கோபம் அடைகிறார். அதே போல அந்த கோபத்தினை பாக்கியா மீது காட்டவும் செய்கிறார். இதனால் பாக்கியா மிகவும் நொந்து போய் விடுகிறார்.
நாட்டில் இன்று ஒரே நாளில் 6,168 பேருக்கு கொரோனா உறுதி – மத்திய அரசு ரிப்போர்ட்!
ஆனால், இது இப்படி நடந்தாலும் எதை பற்றியும் கலங்காமல் ராதிகாவிடம் திருமணம் பற்றிய பேச்சினை கோபி எடுக்கிறார். முதலில், கோபி மீது மிகவும் அன்பாக இருக்கும் ராதிகா, பாக்கியா மற்றும் ஈஸ்வரி இருவரும் பேசியதும் மனம் மாறுகிறார். இதனால் கோபி திருமணம் பற்றி பேச்சு எடுக்கும் போது அதனை தவிர்த்து விடுகிறார். ராதிகா மீது கோபப்படும் கோபி , வேறு வழியில்லாமல் விஷம் அருந்தி விடுகிறார். இதனால் ராதிகா கோபியை திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொள்கிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்