நகைச்சுவை நடிகர் “வைகை புயல்” வடிவேலுவிற்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!
படப்பிடிப்பு முடிந்து லண்டனில் இருந்து இந்தியா வந்த காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிவில் தொற்று உறுதி ஆகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா தொற்று:
தற்போது நாடு முழுவதும் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்த சூழ்நிலையில் பொது முடக்கங்கள் தளர்த்தப்பட்டது. மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளின் அடிப்படையில் மக்களும் பொது இடங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். அனைத்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பொது முடக்கத்தால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது தொற்று குறைந்ததன் காரணமாக அனைத்தும் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை – மாணவர்கள் மகிழ்ச்சி!
ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் கடந்த நவம்பர் மாதம் முதல் தென் ஆப்ரிக்காவிலிருந்து பரவி உள்ளது. இதையடுத்து ஓமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பல்வேறு சினிமா நடிகர்களும் கொரோனா பரவி உயிரிழந்தார்கள் என்ற தகவல் நாம் அறிந்தவையே. தமிழ் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் வடிவேலு.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தரம் குறித்த ஆய்வு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
அவர் தற்போது படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றிருந்தார். ஷூட்டிங் முடிந்து இந்தியா திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் வடிவேலு அவர்களுக்கு சோதனை முடிவு பாசிட்டிவ் என வந்த நிலையில் தான் தற்போது அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இந்த தகவல் அவர் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.