இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி – சீரம் நிறுவனம் தயாரிப்பு!

0
இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி - சீரம் நிறுவனம் தயாரிப்பு!
இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி - சீரம் நிறுவனம் தயாரிப்பு!
இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி – சீரம் நிறுவனம் தயாரிப்பு!

நாடு முழுவதும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் நோயாக கருப்பை வாய் புற்றுநோய் இருக்கிறது. இந்நிலையில் 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு இந்த நோய்க்கான தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது.

தடுப்பூசி:

உலகளவில் பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் ஒன்றாக கருப்பை வாய் புற்றுநோய் இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்படும் பெண்களில் நான்கில் ஒரு பங்கு பெண் இந்தியாவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இந்திய பெண்களில் அதிகம் இறப்புக்கு காரணமாக இந்த நோய் இருக்கிறது. இந்த நோயால் அதிகமாக கிராமப்புற பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில் இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பெண்கள் கர்ப்ப‌ப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து, ‘செர்வாவேக்’ என்ற பெயரில் சீரம் நிறுவனம் தடுப்பூசி தயாரித்து இருக்கிறது. இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கரூர் வைஸ்யா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் உயர்வு!!

மேலும் ஏழை எளிய பெண்கள் பயன் பெறும் வகையில் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை சீரம் நிறுவனம் தடுப்பூசியை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய்க்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனையில் 3000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதால் அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!