கரூர் வைஸ்யா வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் உயர்வு!!
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், கரூர் வைஸ்யா வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
வட்டி விகிதம் உயர்வு
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தற்போது 2023ம் ஆண்டு தொடங்கிய நிலையில் பல்வேறு வங்கிகள் தனது வட்டி விகிதத்தை மாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கரூர் வைஸ்யா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, தனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், சேமிப்பு கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு உட்பட்ட தொகைக்கு 2.25% வட்டி விகிதமும், இதே போல் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்கு குறைவான சேமிப்பு தொகைக்கு 2.50% வட்டி விகிதமும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான சேமிப்பு கணக்கிற்கு 3% வட்டி விகிதம் வரை கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் – பிப். 1 முதல் தொடக்கம்!
இதனை தொடர்ந்து. சேமிப்பு கணக்கில் ரூ.1 கோடி முதல் ரூ.100 கோடி வரை நீங்கள் சேமித்தால் உங்களுக்கு 3.25% வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை 5% வட்டி விகிதம் கிடைக்கும் என்றும் அத்துடன் ரூ.150 கோடிக்கும் மேற்பட்ட சேமிப்பு கணக்கிற்கு 5.25% வட்டி விகிதமும் கிடைக்கும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வட்டி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.