அக்.15க்குள் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் – முக்கிய அறிவுறுத்தல்!
டெல்லியில் உள்ள பள்ளிகளில் அனைத்து பணியாளர்களும் வரும் 15ம் தேதிக்குள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு உத்தரவு:
கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் குறைந்து நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியிலும், கடந்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசு பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. அதன்படி, பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை தனியார் பள்ளிகளுக்கு அளித்துள்ளது.
சென்னை பொதுத்துறை வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதன்படி, அனைத்து டெல்லி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் அக்டோபர் 16 முதல் தங்கள் அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களுக்கு வர அனுமதிக்கப்படாது என்று அறிவித்தது. மேலும், தடுப்பூசி போடப்படாத டெல்லி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் உட்பட அவர்கள் விடுப்பில் உள்ளதாக கருதப்படுவார்கள்.
மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி கொரோனா தடுப்பூசி கட்டாயம்!
அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் தங்களின் தடுப்பூசியைப் பெறாத போக்குவரத்து ஊழியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யுமாறு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கல்வி இயக்குநரகம் கேட்டு கொண்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளின் உயிரை பணயம் வைக்க முடியாது என்பதால், இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம் என்று, இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டிபிஏ தலைவர் அபராஜிதா கவுதம் தெரிவித்துள்ளார்.