மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி கொரோனா தடுப்பூசி கட்டாயம்!
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி கட்டாயம்:
கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 93 கோடி தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாகவும் 50.5 சதவீதம் பேர் முதல் தவணை செலுத்தி உள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
குழந்தைகளுக்கான பால் ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்நிலையில் டெல்லியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோர் வரும் 15ஆம் தேதிக்குள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வரை அவர்கள் விடுப்பில் இருப்பதாக கருதப்படுவதாகவும் டெல்லி தலைமை செயலாளர் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA) செயற்குழு தலைவர் விஜய் தேவ் ஆகியோர் கூறியுள்ளனர்.
IRCTC ’ஸ்ரீ ராமாயண யாத்ரா’ 13 நாட்கள் உணவு, தங்குமிட வசதியுடன் ஆன்மிக சுற்றுலா – முன்பதிவு தொடக்கம்!
அதனை தொடர்ந்து தனியார் பள்ளி ஆசிரியர்களும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வரும் 16 ஆம் தேதியில் இருந்து பள்ளிகளில் அனுமதிக்கப்படக்கூடாது என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பிற ஊழியர்கள் உள்ளிட்டோர் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.