ஆகஸ்ட் 2 முதல் 9 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து உத்தரகண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு வழிகாட்டுதல்கள்:
ஆகஸ்ட் 2 முதல் உத்தரகண்ட் மாநில கல்வித்துறை 9-12 வகுப்பு வரையிலும், ஆகஸ்ட் 16 முதல் 6-8 வகுப்புகளுக்கு மாநிலத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) வெளியிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் கோவிட் 19 நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்கு இரண்டு ஷிப்டுகளில் வகுப்புகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ATM பரிவர்த்தனை கட்டணங்கள் அதிகரிப்பு அமல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
பள்ளிகள் திறப்பதற்கு முன் அனைத்து வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிவறைகள், குடிநீர், முதலியன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடமாட்டங்கள் உள்ள இடங்களை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. சமூக இடைவெளி மற்றும் கோவிட் நெறிமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட பள்ளியால் ஒரு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 5 வரை மழை பெய்யவுள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!
ஏதேனும் மாணவர் அல்லது ஆசிரியர் அல்லது பிற பள்ளி ஊழியர்களுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், முதலுதவி அளித்த பிறகு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தொற்று நோய் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட முதல்வர் மற்றும் அதிகாரி உடனடியாக மாவட்ட நிர்வாகம் அல்லது சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.