மே 1 வரை அரசு அலுவலகங்கள் மூடல் – மாநில அரசு அறிவிப்பு!!
உத்தரகண்ட் மாநிலத்தில் பெருகி வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மே மாதம் 1 ஆம் தேதி வரை அரசு அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் மூடல்
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் மாநிலங்கள் தோறும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தவிர இரவுநேர ஊரடங்குடன் கூடிய பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தென் மாநிலங்களை விட வட மாநிலங்கள் இந்த நோய் தாக்கத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த சூழலில் உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரம் பேர் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக நோய் பரவல் காரணமாக கடைகள், கோவில்கள், திருமணம், இறப்பு, போக்குவரத்து போன்ற காரியங்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர பிற அலுவலகங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ (AI) படிப்புக்கான ஆராய்ச்சி உதவித்தொகை – தகுதிகள் என்னென்னெ?
அதன்படி அம்மாநிலத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு அலுவலகங்களையும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மே மாதம் 1 ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நலனை கவனத்தில் கொண்டு நோய் பரவுவதை தடுக்க உத்தரகண்ட் மாநிலத்தில் முழு முடக்கத்தை அறிவிக்கும்படி அம்மாநில அமைச்சர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.