அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் – மாநில அரசு அறிவிப்பு!!

0
அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் – மாநில அரசு அறிவிப்பு!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தீரத் சிங் தெரிவித்துள்ளார்.

நீதி ஒதுக்கீடு:

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. மேலும் தங்களுக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளையும் அறிவிக்கின்றன. கொரோனா பரவல் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகமாக உள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனால் இந்தியாவிற்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரகாண்ட் மாநில அரசு ஏற்கனவே 18 வயது மேற்பட்டோர்க்கு மே 1ம் தேதி முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

‘இந்த’ சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

இதை தொடர்ந்து தற்போது உத்தரகாண்ட் அரசு கொரோனா தடுப்பூசிக்கான நிதியை ஒதுக்கியுள்ளது. இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க அம்மாநில அரசு ரூபாய் 400 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அனைவர்க்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனவும் மேலும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் 7,500 ரெம்டெசிவிர் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தரகாண்ட்  முதல்வர்  தீரத்  சிங்  தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!