UPSC EPFO வேலைவாய்ப்பு 2023 – கமிஷன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
Assistant Provident Fund Commissioner and Enforcement Officer – Accounts Officer ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை UPSC சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிக்கு மொத்தம் 577 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மார்ச் 17 ஆம் தேதி கடைசி நாள். இந்நிலையில் UPSC முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை பற்றி இப்பதிவில் காண்போம்.
UPSC EPFO வேலைவாய்ப்பு விவரங்கள்:
EO/AO – 418 பணியிடங்கள் மற்றும் APFC – 159 பணியிடங்கள் என மொத்தம் 577 பணியிடங்கள் UPSC மூலம் நிரப்பப்பட உள்ளது. மார்ச் 17, 2023 இன் படி EO/ AO பதவிக்கு 30 ஆண்டுகள் மற்றும் Assistant Provident Fund Commissioner பதவிக்கு 35 ஆண்டுகள் என வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு பற்றிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்னும் சில தினங்களே உள்ளதால், கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்த்து, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.