UPSC சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வு – ஆகஸ்ட் 2ம் தேதி தொடக்கம்!
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா நோய்பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. தற்போது அதற்கான முழு விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
யுபிஎஸ்சி:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு மக்கள் யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா நோய்பரவல் வேகம் எடுக்க தொடங்கியது. இதனால் நாட்டில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவல் வேகம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு நிறுத்தப்பட்டது. மேலும் நேர்முகத் தேர்வு குறித்து முறையான அறிவிப்பு வெளிவராத காரணத்தால் தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.
ஜூன் 17 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் நாட்டில் தற்போது கொரோனா தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்விஸ் முதல் கட்ட தேர்வு வருகிற அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிக்கை வெளியானது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முக தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி வருகிற வருகிற ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 22ம் தேதி வரை 2020ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் நேர்முக தேர்வு நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் இதற்கான அழைப்பு கடிதங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேர்காணல் கடிதங்கள் ஆணையத்தின் வலைத்தளமான https://www.upsc.gov.in & https://www.upsconline.in தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் நேர்முக தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் மாணவர்கள் கோரிக்கைகள் படி மாற்றப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.