உத்தரபிரதேச ரோடுவேஸ் ஊழியர்களுக்கு டிஏ உயர்வு குறித்த அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. அதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
சம்பள உயர்வு
உத்தரபிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. அதாவது ரோடுவேஸ் ஊழியர்களுக்கு 10% டிஏ உயர்வை அறிவித்துள்ளது. இதனால் அவர்களின் ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வானது 2024 பிப்.1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் இதுவரை 28% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் 38% ஆக உயர்ந்துள்ளது.
அமேசான் நிறுவனத்தில் உங்களுக்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இதன் மூலம் 12000 ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ. 15000வரை அதிகரிக்கும், மேலும் அதிகாரிகளுக்கு ரூ. 8000 முதல் ரூ. 15000 வரை மாத சம்பளம் உயரப்படுகிறது. உத்தரப் பிரதேச சாலைப் பணியாளர்கள் சங்கம், கணிசமான காலமாக DA அதிகரிக்கப்பட வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.