தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை குறித்த அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்க முழு விபரம் உள்ளே!!
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற பொது, மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினராக இருப்பின் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இதே போல் பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், இதர வகுப்பை சேர்ந்தவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
பெண் ஊழியர்களுக்கு 60 நாள் சிறப்பு விடுப்பு – மத்திய அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!!
Follow our Instagram for more Latest Updates
மேலும் விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. அத்துடன் இத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதந்தோறும் ரூ.200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400ம் பட்டதாரிகளுக்கு ரூ.600 என மாதந்தோறும் வழங்கப்படும்.
அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000ம் உதவித்தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து 28.2.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.