தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணைய (TNPSC) புதிய செயலர் – உமா மஹேஸ்வரி நியமனம்!
தமிழக அரசின் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய செயலாளராக திருமதி பி. உமா மஹேஸ்வரி அவர்களும், தேர்வு கட்டுப்பட்டு அலுவலராக திரு. கிரண் குராலா அவர்களும் இன்று (ஜூன் 25) பதவியேற்று கொண்டனர்.
புதிய செயலர் நியமனம்
தமிழகத்தில் அரசு பணிக்காக தேர்வுகளை வைத்து பணியாளர்களை அமர்த்தும் பணிகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வந்தது. இந்த தேர்வாணையத்தில் செயலர், தலைவர் உள்ளிட்ட 14 பேர் பணியாற்றி வந்தனர். இதற்கிடையில் சில காரணங்கள் நிமித்தமாக ஆணையத்தின் செயலர் மற்றும் தலைவர் சமீபத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டனர். அதனால் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் பல நாட்களாக முடக்கப்பட்டிருந்தது. தவிர அரசு பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளும் பாதிக்கப்பட்டது. அதனால் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் புதிய தலைவர் மற்றும் செயலரை நியமித்து தேர்வு பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என்று அரசுக்கு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
தமிழக அரசு பள்ளி கட்டிடங்களில் இயற்கை பேரிடர் பாதுகாப்பு – செயல்முறைகள் வெளியீடு!
இந்த நிலையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய செயலாளராக பி. உமா மஹேஸ்வரி ஐஏஎஸ் அவர்களும், தேர்வு கட்டுப்பட்டு அலுவலராக கிரண் குராலா என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பி. உமா மஹேஸ்வரி அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றிய போது, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம், செயற்கை கோள் நகரம், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு, காவேரி மற்றும் குண்டாறு இணைப்பு துவக்கம், நிலத்தடி நீர் உற்பத்தி, கிராமப்புற பகுதிகளின் வளர்ச்சி உள்ளிட்ட பல சேவைகளை துவங்கி அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
மேலும் தேர்வு கட்டுப்பட்டு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கிரண் குராலா விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்து, கள்ளக்குறிச்சியின் முதல் மாவட்ட ஆட்சியாளராக பொறுப்பேற்றார். இதை தொடர்ந்து அம்மாவட்டத்தை தூய்மையான வாக்காளர் பட்டியலில் முதன்மையாகவும், கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் போது இ- பாஸ் நடைமுறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசிடம் பாராட்டுகளையும், கவுரவத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.