‘பதுங்கு குழிகளுக்கு செல்லுங்கள்’ – உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் இந்திய தூதரகம் இந்தியர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
போர் பதற்றம்:
உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவிற்கும் இடையில் நடந்து வரும் மோதல் தற்போது அதிக தீவிரமடைந்து வருகின்றது. அதில், உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது. ரஷியா சுமாா் 1 லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் முன்னதாக உக்ரைனின் எல்லைப்பகுதியில் குவித்து வந்தது.
தமிழகத்தில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2022 – உடனே பாருங்க..!
இந்நிலையில், தற்போது உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. அதில், நாட்டில் உக்ரைனை மூன்று திசைகளில் இருந்து சுற்றிவளைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது. கருங்கடல் பகுதியில் இருந்து போர்க்கப்பல்கள் மூலமாக உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டு வருகின்றது. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸில் இருந்து உக்ரைனின் வடக்கு நகரங்கள் மீது ரஷ்ய விமானப்படை குண்டு மழை பொழிந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலுக்கு அதி நவீன ஏவுகணைகள் பயன்படுத்தபட்டு வருகின்றது. இந்த பகுதிகளில் 100க்கும் பெறப்பட்ட தமிழக மருத்துவ மாணவர்கள் சிக்கியுள்ளனர். மேலும் உக்ரைனின் தலைநகரான கீவ் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர்.
பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய வனிதாவின் முதல் பதிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!
இதனால் இந்திய தூதரகம் உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியர்கள் யாரும் இருக்கும் இடத்தை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், பதுங்கு குழிகளை நோக்கி செல்லவும் கூறியுள்ளது. கூகுள் மேப்பில் பதுங்கு குழிகளை அறிந்து கொள்ளவும், உக்ரைன் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் அடையாளம் என்றும் கூறியுள்ளது. மேலும்,வெளியேரும் நிலை ஏற்பட்டால் தங்கள் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.