ஆதார் துறையில் முக்கிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Principal Biometric Architect பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது. இதை நிரப்பும் பொருட்டு படித்த தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவில் கீழுள்ள இணைப்பின் மூலம் தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளலாம்.
UIDAI வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின், Principal Biometric Architect பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் உள்ள அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த பொறியியல் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MS / M.Tech / ME போன்ற ஏதேனும் ஒரு டிகிரி வைத்திருக்க வேண்டும் அல்லது PhD / PhD Scholar களும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Biometric technology / AI / ML / DL / Computer Vision போன்றவற்றில் PhD/PhD Scholar படித்தவர்கள் 5 ஆண்டுகள் மற்றும் MS / M.Tech / ME படித்தவர்கள் 7 ஆண்டுகள் மு அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
Join Our TNPSC Coaching Center
- இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Artificial Intelligence, Phd Research, To be actively involved in the activities of Biometrics Research Centre (to be set up), To supervise in house Research & Development (R&D) in Biometrics technology, Evaluate performance of indigenously getting developed Dedup engine and SDKs போன்ற பணிக்கு சம்பந்தமான திறன்கள் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
UIDAI விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுத்துள்ள விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து 27.02.2022ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டார்கள். தற்போது நாளையுடன் ( 27.02.2022) இப்பணிகள் கால அவகாசம் நிறைவடைவதால் உடனே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.