ட்விட்டர் பயனாளர்களுக்கான புதிய அப்டேட்டை வெளியிட்ட CEO – முழு விவரங்கள்!
ட்விட்டர் பக்கத்திற்கான தலைமை நிர்வாக அதிகாரி அவ்வப்போது பல அப்டேட்களை வழங்கி வரும் நிலையில் தற்போது ஒரு புதிய அப்டேட் ஒன்றையும் வழங்கியிருக்கிறார்.
ட்விட்டர்:
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அவ்வப்போது ட்விட்டர் குறித்தான பல அப்டேட்களை வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூகுளையே மிஞ்சும் அளவிற்கு ChatGPT என்கிற அமைப்பை நிறுவினார். இதனை தொடர்ந்து ட்விட்டர், ChatGPT என அனைத்திலும் அப்டேட்களை வழங்கியபடி இருக்கிறார். இந்நிலையில், ட்விட்டர் பயனாளர்கள் எளிமையாக தேவையான தகவல்களை புக்மார்க் செய்யும் படியான அப்டேட்டை வழங்கினார்.
மேலும், தற்போது எங்களுடைய ட்விட்டர் அல்காரிதம் சற்று சிக்கலானது தான். பொதுமக்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும், பொதுமக்கள் ட்விட்டரில் உள்ள பல குறைகள் மற்றும் சிக்கல்களை கண்டுபிடித்து கொண்டிருக்கின்றனர். அந்த குறைகள் மற்றும் சிக்கல்கள் அனைத்தும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் எனவும், கண்டறியப்படும் சிக்கல்கள் ஓப்பன் சோர்ஸாக இருக்கும் எனவும் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.