ஜூன் 10 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – பிற்பகல் 2 மணிவரை கடைகள் திறக்க அனுமதி!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு திரிபுரா மாநில அரசு முழு ஊரடங்கு உத்தரவை ஜூன் 10 வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் கடைகள் திறப்பு நேரத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கு நீட்டிப்பு:
திரிபுரா மாநில அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பின்படி, கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கானது தற்போது மே 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அகர்தலா மற்றும் பிற நகர்ப்புறங்களில் மதியம் முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும், மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கிராமப்புறங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஜூன் 14 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு? இன்று அறிவிப்பு!
இந்த கட்டுப்பாடுகள் ஜூன் 6 ஆம் தேதி வரை ஏற்கனவே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக மே 16 அன்று முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வந்தது. மேலும் 10 நாட்களுக்குப் பிறகு, 29 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கொரோனா ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், மளிகை பொருட்கள், காய்கறிகள், பால், இறைச்சி மற்றும் மீன் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தற்போது மதியம் 2 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
பல மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டித்துள்ளன. இருப்பினும், கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் பல மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 1,32,364 புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகி, நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,85,74,350 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் விகிதம் 93 சதவீதத்தை தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.