TRB கணினி அறிவியல் ஆசிரியர் தேர்வு குறித்த புகார்கள் – மார்ச் 1 ஆம் தேதி கடைசி நாள்!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான தேர்வில் முறைகேடுகள் ஏதாவது இருப்பின் புகார்களை மார்ச் 1ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று விசாரணை கமிட்டி தெரிவித்துள்ளது.
கணினி அறிவியல் ஆசிரியர் தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2019 ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின் படி, இரு நபர் விசாரணை கமிட்டி தொடங்கப்பட்டுள்ளது. அதில் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணினி அறிவியல் தேர்வில் கலந்துகொண்ட தேர்வர்கள் தேர்வு குறித்த குறைகள் மற்றும் புகார்கள் இருந்தால் அதனை மார்ச் 1 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 22 டி.இ.ஓ., பணியிடங்கள் – தகுதி பட்டியல் தயார் செய்ய உத்தரவு!!
அதன் நகல்களை சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி வளாகத்தில் செய்லபடும் இருநபர் கமிட்டிக்கு தபால் மூலமாக அனுப்பலாம். மேலும் இந்த தேர்வு குறித்து புகார் தெரிவிப்பவர்கள் விசாரணையில் போது நேரில் ஆஜராக அழைத்தால் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்