சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தம் – குடியரசுத் தலைவர் வருகை எதிரொலி!
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் வந்த குடியரசு தலைவர் மூன்றுநாள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி புறப்பட்டார். இதனையடுத்து சென்னையில் விமான நிலைய பகுதி, சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி போன்ற முக்கிய இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் வருகை:
தமிழகத்தில் 1921-ம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி சட்டப்பேரவை தொடங்கப்பட்டது. தற்போது சட்டப்பேரவை தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இது தமிழகத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். 5 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தடைந்தார். இவ்விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
Telegram பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – குரூப் வீடியோ கால் புதிய அப்டேட்!
அவரை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார். அதன் பிறகு சட்டப்பேரவை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் மற்றொரு சிறப்பாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் திரு உருவப்படத்தை குடியரசுத் தலைவர் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் பேசிய அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று கூறி அவரை சிறப்பித்தார். அதனை தொடர்ந்து மூன்றாம் நாள் சுற்றுப் பயணமாக இன்று சென்னையில் இருந்து ஊட்டி புறப்படுகிறார்.
TN Job “FB Group” Join Now
இவரின் வருகையையொட்டி சென்னையில் விமான நிலைய பகுதி, சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி போன்ற முக்கிய இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்லவிருக்கிறார். அதனால் நீலகிரி மாவட்டம் முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிற மாவட்டங்களிலும் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவுள்ளார்.