தமிழகத்தில் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வருகிற மே 24ம் தேதி (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்காக இன்றும் நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக தினசரி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் மே 24 முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கில் எவ்வித தளர்வுகளும் இல்லாமல் அமல்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. இதனால் இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளுக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு – அரசுக்கு கோரிக்கை!!
மேலும் ஒரு வார கால தீவிர முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வகையில் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதற்காக போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையில் இரு நாட்களுக்கு (மே 22, 23) 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
தலைநகர் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 1,500 சிறப்பு பேருந்துகள் மற்றும் திருச்சி, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து உரிய பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.