ரயில்களில் டிக்கெட்களுக்கான புதிய விதிகள் – வெளியான விவரங்கள்!
இந்திய ரயில்வே குழந்தைகளுக்கு டிக்கெட் முன்பதிவு குறித்து புதிய விதிகளை உருவாக்கி இருக்கிறது. இது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிய விதிகள்
இந்தியாவில் பெண்கள் பலர் குழந்தைகளுடன் சௌகரியமாக பயணம் செய்ய ரயில்களை அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து புதிய விதிகளை ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம். இருந்தாலும் ஆகஸ்ட் 2022 முதல் ரயில்வே விதிகளில் சில மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது.
பள்ளி கட்டணத்தை இனி EMI மூலம் செலுத்தும் வசதி – பெற்றோர்கள் கவனத்திற்கு!
அதன் படி 5 வயது முதல் குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு இருக்கை வழங்கப்படமாட்டாது. அதே நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு தனி இருக்கையை முன்பதிவு செய்ய விருப்பம் இருக்கும். இதற்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். மேலும் 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காமல் இருந்தால் டிக்கெட் கட்டணத்தில் பாதியை செலுத்த வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் அவர்கள் பெற்றோர் அல்லது உடன் வருபவர் இருக்கையில் பயணம் செய்யலாம். ஆனால், 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான தனி இருக்கை அல்லது படுக்கையை முன்பதிவு செய்தால், முழு டிக்கெட் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு இருக்கை அல்லது படுக்கை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.