ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நாளை கடைசி நாள் – உடனே இணைக்கவும்!
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நாளை கடைசி நாள் என்பதால் இன்றைக்குள் ஆதார் எண்ணை இணைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் ஆதார் இணைப்பு:
நாடு முழுவதும் ரேஷன் கார்டு மூலமாகவே பொதுமக்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட அனைத்து வகையான ரேஷன் பொருட்களையும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும், மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ என்கிற திட்டத்தின் மூலமாகவும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர். மேலும், ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல குளறுபடிகள் நடந்தபடி இருந்ததால் கட்டாயமாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
PGIMER ஆணையத்தில் Data Entry Operator வேலை – தேர்வு எழுத தேவை இல்லை || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
மேலும், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைப்பதற்கு நாளை ஒருநாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் உடனடியாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இன்றைக்குள் கட்டாயமாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.