நாளை (டிச.15) பொது விடுமுறை – அரசின் உத்தரவு!
திருவனந்தபுரம் மாவட்டத்தில் பீமா பள்ளி தர்காவின் உருஸ் திருவிழாவின் காரணமாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
நாடு முழுவதும் கொண்டாடப்படும் மதம் சார்ந்த முக்கிய பண்டிகைகள் மற்றும் தேசிய விழாக்களுக்கு தேசிய விடுமுறைகளை அறிவித்து அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விடுகிறது. இதை தவிர குறிப்பிட்ட பகுதிகளில் சிறப்பிக்கப்படும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உள்ளூர் விடுமுறை மற்றும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பீமா பள்ளி தர்கா ஷெரிப்பில் நடப்பு ஆண்டுக்கான உரூஸ் மகோத்சவ் விழா நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடுவார்கள்.
தமிழகத்தில் அக்டோபர் மாத மின் கணக்கீடு – அரசு புதிய உத்தரவு!
இதன் காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அரசு திருவனந்தபுரம் பகுதிக்கு பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அரசின் அறிவிப்பின்படி திருவனந்தபுரம் நகராட்சியில் உள்ள அனைத்து மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தில் முன்னதாக திட்டமிடப்பட்ட தேர்வுகள் இருந்தால் அவை கட்டுப்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.