தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடல்? வலுக்கும் எதிர்ப்புகள்!
தமிழகத்தில் தொடர்ந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துகொண்டே வருவதால் ஓ.பன்னிர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சுங்கக்கட்டணம் உயர்வு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நெடுஞ்சாலை பராமரிப்பிற்க்காக வாகன ஓட்டுநர்களிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுங்கக்கட்டணம் உயருவதை கண்டித்து ஓ.பன்னிர்செல்வம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் உயர்ந்து வரும் மின்கட்டணம் ஆகியவற்றிற்கும் எதிராக குரல் கொடுத்துள்ளார்.
அதாவது, சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை தடுக்க தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவை பொறுத்த வரைக்கும் தமிழகத்தில் தான் அதிக அளவிலான சுங்கச்சாவடி உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் உயர்ந்ததை தொடர்ந்து தற்போதும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, நான்கு சக்கர வாகனங்களுக்கு 65 ரூபாயாகவும், மினி லாரி, இலகுரக வாகனம் போன்றவைகளுக்கு 115 ரூபாயாகவும் உயரத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதே போல பேருந்து மற்றும் லாரிகளுக்கு 230 ரூபாயாகவும், கனரக வணிக மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு 370 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுமே சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசுக்கு ஓ.பன்னிர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்