Tokyo Paralympics 2020: டேபிள் டென்னிஸ் வீராங்கனை சோனல் படேல் அதிர்ச்சி தோல்வி!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற்ற பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் தனிநபர் பிரிவில் இந்தியாவின் சோனல் படேல் தோல்வியை தழுவியுள்ளார்.
பாராலிம்பிக் போட்டிகள்
உலக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் பாராலிம்பிக் போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 25) முதல் துவங்கியுள்ளது. இதில் இந்திய அணியை சேர்ந்த 54 வீரர்கள், வீராங்கனைகள் 9 விதமான போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 25) துவங்கியுள்ள பாராலிம்பிக் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் தனிநபர் C 3 பிரிவில் இந்திய வீராங்கனை சோனல்பென் மதுபாய் படேல், சீனாவை சேர்ந்த கியான் லியியுடன் மோதினார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை – வானிலை அறிக்கை!
போட்டியின் துவக்கத்தில் இந்திய வீராங்கனை சோனல் படேல் சிறப்பாக விளையாடினார். இருப்பினும் வலுவான எதிர் போட்டியாளரான சீனாவின் கியான் லியிடம் 11-9, 3-11, 17-15, 7-11, 4-11 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார். அந்த வகையில் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் கியான் லி வெற்றி பெற்றார். போட்டியின் ஆரம்பத்தில், முதல் சுற்றை வெறும் 6 நிமிடங்களில் 11-9 என்ற செட் கணக்கை எடுத்து சோனல் சிறப்பான தொடக்கத்துடன் துவங்கியிருந்தார்.
TN Job “FB Group” Join Now
அடுத்ததாக மூன்றாவது சுற்றில் சோனல், 17-15 என்ற கோல் கணக்கில் வென்று 2-1 என முன்னிலை பெற்றார். அதன்பிறகு, அடுத்த இரண்டு ஆட்டங்களை கியான் லி 11-7, 11-4 என்ற கணக்கில் வென்று போட்டியை தன்வசமாக்கினார். இதை தொடர்ந்து சோனல் படேல் தனது அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவின் மி கியு லீயுடன் மோத இருக்கிறார். டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகள் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.