Tokyo Olympics இந்திய வீராங்கனை மீராபாய் தங்கம் வெல்ல வாய்ப்பு – ஊக்க மருந்து சோதனை!
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான முதல் வெள்ளி பதக்கத்தை பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் பெற்று தந்து அசத்தி உள்ளார். இந்நிலையில் முதலிடத்தை பெற்ற சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து பரிசோதனை செய்ய இருப்பதால், இந்தியாவிற்கு தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒலிம்பிக்கில் தங்கம்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ல் தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. 205 நாடுகளில் இருந்து 11,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியாவிலிருந்து 120 வீரர், வீராங்கனைகள் 18 விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
தமிழக தனியார் கல்வியியல் கல்லூரிகளில் ரூ.30,000 கட்டணம் வசூல் – அமைச்சர் எச்சரிக்கை!
இந்நிலையில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளார். ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டிகளில் பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் முடிவில் ஸ்நாச் முறையில் 87 கிலோவும், கிளீன் அன்டு ஜெர்க் முறையில் 115 கிலோவும் தூக்கினார். மொத்தம் 202 கிலோ தூக்கி ஆட்டத்தில் 2வது இடம் பிடித்தார். இந்த போட்டியில் சீன வீராங்கனை தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.
TN Job “FB Group” Join Now
சீனாவின் ஹு ஜிஹுய் மொத்தமாக 219 கிலோ தூக்கி தங்கம் வென்றார். கூடவே ஸ்நாச் முறையில் 94 கிலோ தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார். இந்நிலையில் இந்தியாவில் இருந்து இரண்டாவது முறை பளுதூக்குதல் போட்டியில் பதக்கம் பெற்ற வீராங்கனையை பலர் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், 49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் முதலிடம் பிடித்த சீன வீராங்கனை ஹு ஜிஹுய்க்கு ஊக்க மருந்து பரிசோதனை செய்யப்படுகிறது. அவர் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால் அவரிடமிருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்படும். இதனால் இந்திய வீராங்கனை மீராபாய் தங்கம் வெல்ல வாய்ப்புள்ளது என தகவல் வெளிவந்துள்ளது