தமிழக தனியார் கல்வியியல் கல்லூரிகளில் ரூ.30,000 கட்டணம் வசூல் – அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed., படிப்புகளுக்கு கட்டணமாக ரூ.30,000 மட்டுமே வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் வசூலிக்கும் நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
கல்விக் கட்டணம் வசூல்:
தமிழகத்தில் இன்று (ஜூலை 26) முதல் அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் வழியாக துவங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரிகளில், B.Ed., படிப்புகளுக்கு ரூ.30,000 கட்டணமாக வசூலிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூறிய அவர், ‘தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை, 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் துவங்குகிறது.
இனி ஞாயிற்றுக் கிழமையும் மாத சம்பளம் கிடைக்கும் – ஆகஸ்ட் 1 முதல் அமல்!
ஆன்லைன் வழியாக துவங்கியுள்ள இவ்விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் பொறியியல் மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவுகளும் இன்று முதல் துவங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை செலுத்தலாம். அந்த வரிசையில் B.Ed., பட்டப்படிப்புகள் அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டண குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.30,000 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும்.
TN Job “FB Group” Join Now
ஆனால் சில கல்லூரிகள் ரூ.30,000க்கும் அதிகமான கட்டணங்களை வசூலிப்பதாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது. அதனால் ரூ.30,000க்கும் அதிகமான கட்டணங்களை வசூலிக்கும் கல்வியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் கல்வித்துறை முடிவு செய்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர மற்ற கல்லூரிகளிலும் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மாறுதல் விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று இடம்பெற்றிருக்கும்’ என தெரிவித்துள்ளார்.