Tokyo Olympics 2020 : இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெற்ற வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கிரேட் பிரிட்டனிடம் 3-4 என்ற கணக்கில் தோல்வியை தழுவியதன் மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
ஹாக்கி போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இப்போட்டியில் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ள இந்திய அணி ஒலிம்பிக் தர வரிசையில் 65 ஆவது இடத்தை வகிக்கிறது. ஒவ்வொரு போட்டிகளிலும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர்களுக்கு ஒலிம்பிக் தங்கப்பதக்கம் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
இதனிடையே இன்று (ஆகஸ்ட் 6) காலை 7 மணியளவில் துவங்கிய மகளிருக்கான ஹாக்கி போட்டியில், இந்திய அணி வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில், உலக சாம்பியனான இங்கிலாந்து நாட்டு வீராங்கனைகளுடன் மோதியது. இப்போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக பதக்கம் வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவி, பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவர விட்டது.
இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், இடையில் 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இருப்பினும் போட்டியின் முடிவில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 3-4 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் வெண்கல பதக்கம் பெறும் கனவு தகர்ந்தது. இதற்கிடையில் ஒலிம்பிக் வரலாற்றில் சுமார் 41 ஆண்டுகள் கழித்து இந்திய ஹாக்கி அணி மீண்டுமாக வெண்கல பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தியர்களின் இத்தனை ஆண்டுகால கனவை நனவாக்கிய வீரர்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.