பெண்களை வம்பிழுக்கும் இளைஞர்களை திருத்தும் சந்தியா, சந்தியாவிடம் வசமாக சிக்கிய பார்வதி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

0
பெண்களை வம்பிழுக்கும் இளைஞர்களை திருத்தும் சந்தியா, சந்தியாவிடம் வசமாக சிக்கிய பார்வதி - இன்றைய
பெண்களை வம்பிழுக்கும் இளைஞர்களை திருத்தும் சந்தியா, சந்தியாவிடம் வசமாக சிக்கிய பார்வதி - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!!
பெண்களை வம்பிழுக்கும் இளைஞர்களை திருத்தும் சந்தியா, சந்தியாவிடம் வசமாக சிக்கிய பார்வதி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் ரோட்டில் பெண்களை வம்பிழுக்கும் பையன் ஒருவனுக்கு சந்தியா புத்திமதி சொல்லி திருத்துகிறார். அதன் பின்னர் அர்ச்சனாவின் தங்கைக்கு பாஸ்கரை கல்யாணம் பண்ணி வைக்க அர்ச்சனா பேங்க்கு பார்க்க வருகிறார். அதே இடத்தில் பார்வதியும் விக்கியை பார்க்க வருகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா மார்க்கெட் சென்று வரும் போது அங்கே சில இளைஞர்கள் பெண்களை வம்பிழுத்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவன் சந்தியாவிற்கு தெரிந்தவனாக இருக்கிறார். உடனே சந்தியா அவனது வீட்டிற்கு சென்று அவனுடைய தங்கச்சியை அழைத்து வருகிறார். அவளை அடையாளம் தெரியாமல் அவனது நண்பர்கள் கேலி செய்கின்றனர்.

பின்னர் முகத்தை பார்த்து தனது தங்கை என தெரிந்து கொள்கிறார். மீண்டும் அவனது நண்பர்கள் வம்பிழுக்க அவன் கோபமடைந்து அடிக்க செல்கிறான். அப்போது அங்கே சந்தியா வருகிறார். உன் தங்கச்சி போல தான் எல்லாருடைய தங்கச்சியும் இருப்பாங்க இப்போதான் பெண்கள் வெளியே வராங்க நீங்க இப்படி பண்ண பொண்ணுங்க வெளியே வரவே பயப்படுவாங்க என்று சந்தியா சொல்லி அந்த பையனை திருத்துகிறார்.

ஜெனி வீட்டிற்கு சென்று உண்மையை தெரிந்து கொள்ளும் பாக்கியா, செழியனை சரமாரியாக திட்டுகிறார் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

பார்வதி விக்கியை பார்க்க பேங்க் கேண்டீனில் காத்திருக்கிறார். அதே கேண்டீனில் அர்ச்சனா அவரது தங்கையுடன் பாஸ்கரை சந்திக்க வருகிறார். அர்ச்சனா தனது தங்கையை பிடித்துள்ளதா என்று கேட்க எனக்கு பார்வதியை தான் பிடித்துள்ளது என்று சொல்கிறார். பார்வதி சரி இல்லை அவளுக்கு தலை எல்லாம் பேன் இருக்கு அவ சுத்தமாவே இருக்கமாட்டா. அவளுக்கு சாப்பிடவே முடியாது மனநிலை பாதிக்கப்பட்டிருக்கு என்று கதை சொல்ல அதை எல்லாம் கேட்டு பார்வதி கடுப்பாகிறாள்.

ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டும் கண்ணன், உண்மையை தெரிந்துகொண்ட குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

பின்னர் அங்கே விக்கி வர அவனுடன் பைக்கில் வருமாறு வற்புறுத்துகிறார். பார்வதியும் விக்கியும் பைக்கில் செல்ல சந்தியா அவர்களை பார்த்து விடுகிறார். வீட்டிற்கு வந்ததும் பார்வதி அர்ச்சனாவை வம்பிழுக்கிறார். பின்னர் சிவகாமி சமையல் போட்டி பற்றி பேச அர்ச்சனா அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர் சந்தியா பார்வதியிடம் காலேஜ் போய்விட்டு வந்துட்டியா என்று கேட்க ஆமாம் என்று சொல்கிறார். சந்தியாவின் இந்த கேள்வியை கேட்டதும் பார்வதி பதட்டமடைகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!