சென்னை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை – மாநகராட்சி உத்தரவு!

0
சென்னை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை - மாநகராட்சி உத்தரவு!
சென்னை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை - மாநகராட்சி உத்தரவு!
சென்னை கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை – மாநகராட்சி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று மிக தீவிரமாக இருந்து வரும் நிலையில் இன்று மற்றும் நாளை பொதுவிடுமுறை என்பதால் இந்த இரு தினங்களில் பொதுமக்கள் சென்னையில் உள்ள கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது புதிய கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் இன்று யுகாகி திருநாள் மற்றும் நாளை தமிழ் வருட பிறப்பு என்பதால் அரசு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதால் கடற்கரை போன்ற பொதுஇடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதுவார்கள். இதனால் தமிழகத்தில் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி – புத்தாண்டு வழிபாடு!!

அதன்படி இன்று மற்றும் நாளை சென்னையில் உள்ள கடற்கரையில் மக்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்களில் கடற்கரை, கோவில் போன்ற பல இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!