தமிழகத்தில் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதி – புத்தாண்டு வழிபாடு!!
நாளை தமிழ் புத்தாண்டு என்பதால் தமிழகத்தில் மக்கள் அனைவரும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மாஸ்க் அணியவில்லை எனில் கோவிலுக்குள் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்க் கட்டாயம்:
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பேருந்துகளில் நின்று பயணிப்பதற்கு தடை, திரையரங்குகளில் 50% இருக்கைகள், கோவில் போன்ற மதசார்ந்த திருவிழாவிற்கு தடை போன்ற பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் நாளை தமிழ் புத்தாண்டு என்பதால் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் – சுசில் சந்திரா பதவியேற்பு!!
அதுமட்டுமல்லாமல் நாளை 10 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாளை கோவிலுக்கு வரும் பகதர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை, சமூக இடைவெளி போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.