தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை – வானிலை மையம் தகவல்!
வளிமண்டல கீழடுக்கு திசை காற்று காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் கொளுத்த தொடங்கியது.வரும் நாட்களில் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு மத்தியில் சில நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழ் வழி பயின்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் – அரசிடம் வலுக்கும் கோரிக்கை!
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் (ஏப்.05, 6) தமிழ்நாடு மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் மழை பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்.
Exams Daily Mobile App Download