திருவாரூரில் இன்று ஒரே நாளில் 19 மாணவர்களுக்கு கொரோனா – பதற்றத்தில் கல்வித்துறை!
திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு முதல் செயல்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு கற்றல் தொடர்பான சிக்கல்கள் எழுந்தது. கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதை முன்னிட்டு தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. பல தரப்புகளில் இருந்தும் மாணவர்களின் கற்றல் நலன் கருதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதனால் தீவிர ஆலோசனைக்கு பின்னர் மீண்டும் 9 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள உயர்கல்வி மாணவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
நேருக்கு நேர் சவால் விடும் அனு மற்றும் ரோஜா; ஜெயிக்கப்போவது யார்? – சண்டே ஸ்பெஷல் சூப்பர் எபிசோட்!
பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாகவே தமிழக அரசு தேவையான நோய் தடுப்பு வழிமுறைகளை வெளியிட்டு அனைத்து பள்ளிகளிலும் அதனை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டது முதல் சில மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. இன்று திருவாரூரில் ஒரே நாளில் பள்ளிக்கு சென்று வந்த மாணவர்களில் 19 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
எடமேலையூர் அரசு பள்ளியில் 13, தலைக்காடு 1, அடியக்கமங்கலம் 1, அரித்துவாரமங்கலம் 2, முனால்கோட்டை 2 என்ற பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் மருத்துவத்துறை அலுவலர்களின் அறிவரையின்படி தனிமைப்படுத்தபட்டுள்ளனர். இந்த மாணவர்களின் வகுப்பில் இருந்த மற்ற மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.