நேருக்கு நேர் சவால் விடும் அனு மற்றும் ரோஜா; ஜெயிக்கப்போவது யார்? – சண்டே ஸ்பெஷல் சூப்பர் எபிசோட்!
ரோஜா சீரியலில் பல திருப்பங்கள் அடிக்கடி வந்தாலும், போட்டிக்கு எப்ப்போதும் பஞ்சமிருக்காது, அந்த வகையில் வரும் வாரம் ஞாயிறு கிழமை ஒரு மணி நேரம் சிறப்பு ஒளிபரப்பு நடக்க இருக்கிறது.
சிறப்பு எபிசோட்:
சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர் பல ரசிகர்களின் ஃபெவரிட் சீரியல் ஆக உள்ளது. இந்த கதையில் குடும்பத்தை மட்டுமே சார்ந்த நிகழ்வுகள் உள்ளதால் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும், பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி மற்றும் ராஜசேகர் போன்றோர் நடித்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மேலும், பிரியங்கா நல்காரி, சுப்பு சூரியன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகினறனர்.
WhatsApp செயலியில் சூப்பர் அப்டேட் – இனி எமோஜிகளுடன் பதில் அளிக்கலாம்!
ஹீரோ அர்ஜுன் மற்றும் ஹீரோயின் ரோஜா இருவரின் ரொமான்ஸ் காட்சிக்கு அதிக வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அன்னபூரணியின் பேத்தி சிறு வயதில் காணாமல் பொய் விடுகிறார். அது யார் என்பதை கண்டுபிடிக்கும் கதை தான் ரோஜா. வரும் செப்டெம்பர் 12ம் தேதி ஞாயிறு கிழமை 1 மணி நேரம் சிறப்பு எபிஸோட் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனு மற்றும் ரோஜா இருவரும் சவால் விட்டுக் கொள்ளும் காட்சிகள் உள்ளது.
ப்ரோமோவில், அனு ரோஜாவிடம், நீ ஆதரவில்லாதவள் அப்புறம் எப்படி உன்னை இந்த வீட்டு வாரிசாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்கிறாள். அதற்கு ரோஜா நான்தான் இந்த வீட்டு வாரிசு என்று ஒவ்வொரு முறையும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து நிரூப்பிக்க முயற்சிக்கும்போது நீ தடுத்துவிடுகிறாய். ஆனால் ஒரு அம்மா தன் மகள் யாரேன்று சொன்னால் நம்புவார்கள் செண்பகம் அம்மாவை கூட்டிக்கிட்டு வர இருப்பதாக ரோஜா சொல்கிறார். அதற்கு அர்ஜுன் ரோஜாதான் இந்த வீட்டுபொண்ணு என்பதை நிரூபிக்குவரை நான் தூங்கமாட்டேன் என்று சொல்வது போல் ப்ரோமோ முடிந்துள்ளது.