தமிழகத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை.. அதிகரிக்கும் பனிமூட்டம் – உஷார் மக்களே!
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை:
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதியில் நிலவி வருகிறது. மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே நேற்று நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று அதே பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 4-ம் தேதியான நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், குறிப்பாக நீலகிரி, தேனி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பனிமூட்டம காணப்படும். நடப்பு வார இறுதி வரை ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. குமரிக்கடல் பகுதிகள் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச உள்ளதால் இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.