தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த தகவல்களை அறிக்கையாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வானிலை நிலவரம்:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த இடத்திலும் மழை பொழிவு பதிவு செய்யப்படவில்லை. இதனால் வறண்ட வானிலையே நிலவியுள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டங்களில் இரவு மற்றும் அதிகாலை வேலைகளில் உறை பணி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று மற்றும் நாளை குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
தனியார் வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!