அதிரடி காட்டும் தங்கம் விலை.. ஒரே நாளில் 5,100-ஐ தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில் இன்று என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்றைய தங்கத்தின் நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை
தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் மாறி கொண்டே வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை இந்த மாத தொடக்கத்தில் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. ஆனாலும் பொதுமக்களிடம் தங்கத்தின் மீதான ஆர்வம் குறைவதில்லை. மேலும் அயல் நாட்டினரும் தங்கத்தின் மீது அதிக முதலீடு செலுத்தி வருவதால் தங்கத்தின் தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் இதன் விலையும் ஒவ்வொரு நாளும் புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.40,688க்கும் இதே போல், ஒரு கிராம் ரூ.5,086க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,100-ஐ தாண்டியுள்ளது.
அதிர்ச்சி செய்தி.. மதுரைக்குள் நுழைந்த சீனாவின் கொரோனா வைரஸ் – கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!
Exams Daily Mobile App Download
அதாவது இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.5,105க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்து ரூ.40,840க்கு விற்பனையாகிறது. இதனை தொடர்ந்து, வெள்ளியின் விலையும் அதிரடியாக 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.74.60க்கும் மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் ரூ.7460க்கும் விற்பனையாகிறது.