போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் – அரசுக்கு வந்த முக்கிய கோரிக்கை!
தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வேலை நிறுத்தம்:
தமிழக போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தங்களுக்கான அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், வாரிசு அடிப்படையிலான வேலை, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் 15 வது ஊதியக்குழு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். தற்போது ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் நாளை பேருந்துகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் வருகை பதிவு முறையில் மாற்றம் – அதிகாரிகள் நடவடிக்கை!
போக்குவரத்து தொழிற்சங்கங்களில் நீண்ட கால கோரிக்கையை அரசு நிறைவேற்றாமல் உள்ளது பெரும் கண்டனத்திற்குரியது என்றும் கூறினார். மேலும் பொங்கல் பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நேரத்தில் வேலை நிறுத்த போராட்டம் பெரும் சிரமத்தினை ஏற்படுத்தும். அதனால் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி பொது நலன் கருதி அரசு முடிவு எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.