தமிழக போக்குவரத்து துறையில் பழைய ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு – தொடரும் புகார்கள்!
தமிழக போக்குவரத்து துறை சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துதல் மற்றும் அகவிலைப்படி உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு தொடர்ந்து புகார்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
தனிப்பிரிவில் புகார்:
தமிழக போக்குவரத்து கழகத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்கள் மிகக்குறைந்த அகவிலைப்படி பெற்று வந்த நிலையில் கடந்த 1998ம் ஆண்டு ஆட்சியில் முதல்வராக இருந்த கலைஞர் அவர்களின் முயற்சியின்படி அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த 2015ம் ஆண்டு மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது. இதனால் ஒருவருக்கு 6 முதல் 10 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக ஊழியர்களுக்கு இலவச இருசக்கர வாகனங்களுக்கான மானியம் ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!
இந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை சுமார் 72 மாதங்களுக்கு நிலுவையில் இருந்து வருகிறது. அதனை வழங்கக்கோரி பல முறை போக்குவரத்து துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் அகவிலைப்படி நிலுவை மற்றும் பழைய ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கை முன்வைத்து போக்குவரத்து துறை ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டங்களையும் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக சார்பிலான தங்களது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் காவலர் வசிக்கும் வீடுகள் பெரியாதக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
அதாவது போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்கப்படும். இந்த இரண்டு செயல்பாடுகளும் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என்று திமுக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் தற்போது 200 நாட்கள் ஆகியும் இன்னும் செயல்படுத்தப்படாதது ஊழியர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இது குறித்து தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து புகார் அனுப்பப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.