தமிழகத்தில் காவலர் வசிக்கும் வீடுகள் பெரியாதக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் பொது மக்களை பாதுகாத்து வரும் காவலர்கள் வசிக்கும் வீடுகள் பெரிதாக கட்டி தரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இதனால் காவலர்கள் அனைவரும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றன.
காவலர்களுக்கான குடியிருப்பு
தமிழகத்தில் காவல்துறையினர் பொது மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை பாராட்டும் விதமாக தமிழக அரசு பல்வேறு விருதுகளையும் , பாராட்டுகளையும் காவலர்களுக்கு வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து போலீசார் வசிப்பதற்கு குறைந்த வாடகையில் வீடுகள் கட்டி கொடுக்கிறது. இந்த வீடுகள் காவலர் குடியிருப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வீடுகளில் காவலர் முதல் டி.எஸ்.பி.க்கள் வரை தங்கியுள்ளன. ஒவ்வொரு வீடுகளின் அளவும் அந்தந்த பதவிக்கு ஏற்ப இருக்கும். 1990-களில் காவலர்களுக்கான வீடுகள் வெறும் 375 சதுர அடி தான் கட்டி கொடுக்கப்பட்டது.
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
அதன் பின்பு 650 சதுர அடியாக மாற்றப்பட்டது. தற்போது இதனை மேலும் பெரியதாக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. காவலர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கான குடியிருப்பு வீடுகள் தற்போது 650 சதுர அடி அளவினை கொண்டது. இதனை தற்போது 750 சதுர அடியாக உயர்த்தப்படும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. அதாவது 15.38 சதவீதம் அதிகமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான வீடுகள் 724 சதுர அடி அளவினை கொண்டுள்ளது. இது தற்போது 850 சதுர அடியாக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது 17.40 சதவீதம் அதிகமாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 15 வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
மேலும் இன்ஸ்பெக்டர்கள் வசிக்கும் வீடுகள் தற்போது 843 சதுர அடியில் உள்ளது. இதனை 18.62 சதவீதம் அதிகமாக்கப்பட்டு 1000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றும் டி.எஸ்.பி.கள் வசிக்கும் வீடுகள் 1,273 சதுர அடியில் இருந்து, 17.83 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. அதாவது 1500 சதுர அடியாக உயர்த்தப்படுகிறது. இதன் அடிப்படையில் இனிமேல் கட்டப்படும் காவலர் குடியிருப்பு வீடுகள் கட்டப்படும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவலர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளன. மேலும் காவலர்கள் அனைவரும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றன.