ரூ.50,000/- ஊதியத்தில் காத்திருக்கும் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த தமிழக அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இரவுக் காவலர் (Night Watchman) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
- விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராகவும், மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக வழங்கபப்ட்ட உள்ளது.
- இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
BARC வேலைவாய்ப்பு – ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குக்கான சூப்பர் வாய்ப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 19.12.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.