TNPSC தேர்வெழுதவுள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்து அதிகாரபூர்வ விளக்கம்!
தமிழகத்தில் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள், புதிய பாடத்திட்டங்கள் இல்லை என்று TNPSC தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
TNPSC தேர்வு:
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் மூலம் பணிகள் வழங்கப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை. அதனால் 2022ம் ஆண்டாவது போட்டித் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது வந்தது. இதையடுத்து அரசு பணிகள் தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் குறித்து கலந்தாலோசித்து கால அட்டவணையை வெளியிட்டது. அதில் 22 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இரவு ஊரடங்கு அமல், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் முதல் கட்டமாக குரூப் 2 தேர்வில் 11,000 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த தேர்வு குறித்த அறிவிப்பு 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் குரூப் 4 தேர்வில் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளது இது குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அரசு பணிகளில் தமிழ் மக்களை பணியமர்த்தும் நோக்குடன் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழித்தேர்வில் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெறுவது அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
அதனை தொடர்ந்து TNPSC இணையதளத்தில் தேர்வு குறித்த சில விவரங்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வெளியிடப்பட்ட தகவல்கள், தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரூப் 4 தேர்வு தேர்வு குறித்த எவ்வித பாடத்திட்டமும் TNPSC இதுவரை வெளியிடவில்லை. புதிய பாடத்திட்டங்கள் எவ்வாறு அமையும் என்பது மட்டுமே வெளியிடப்பட்டது. இதற்காக வெளியிடப்பட்ட தகவல்கள் தேர்வர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் TNPSC இணையதளத்தில் இடம்பெற்ற பாடத்திட்டம் குறித்த விளக்கம் நீக்கப்பட்டுள்ளது.