TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2021 – 2022 !
Revised TNPSC Annual Planner (டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை) விரைவில் வெளியாக உள்ளதாக TNPSC செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
TNPSC Annual Planner 2021:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டு தோறும் பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வு அட்டவணை வெளியாகும். இதன் மூலம் 15000 க்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு கடந்த 2 வருடங்களாக இழு பறியாக உள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட தேர்வு கால அட்டவணை படி, குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் பதிவு மட்டுமே நடைபெற்றது. அதன்பின், ஏற்பட்ட கொரோனா பெரும் தொற்றின் காரணமாக அனைத்து பணிகளும் முடங்கின. 2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் அறிவிக்கப்படாமல் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
கொரோனா முதல் அலையின் தாக்கம் குறைந்த பின், குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுகள் மட்டும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 நாள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, முதன்மை தேர்வுக்கான தேதியையும் TNPSC அறிவித்தது. அது மட்டும் அல்லாமல், 2021 முதல் 2022 ஆண்டிற்கான TNPSC Annual Planner யையும் வெளியிட்டது.
இந்த தேர்வு அட்டவணை மூலம் AAO, Agricultural Officer (Extension), Horticultural Officer மற்றும் CESSE ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகின. மீண்டும் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக CESSE தேர்வுகள் மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. அதன் பின் அறிவிக்கப்பட்ட வேண்டிய குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் அறிவிக்கப்படாமல் உள்ளன.
TNPSC Revised Annual Planner 2022:
எஞ்சிய 34 தேர்வுகள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளி வராத நிலையில், TNPSC செயலாளர் உமா மகேஸ்வரி அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பரவல் காரணமாக, வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிட்ட படி, தேர்வுகளை வெளியிட இயலாத நிலை உள்ளது. அதனால் தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வாணையம் ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, திருத்தப்பட்ட புதிய வருடாந்திர தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
Wanted to join for business
Please add my details