தமிழக அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்கள் – விரைவில் TNPSC தேர்வு அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பேரலை காரணமாக நடத்த முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டதான TNPSC குரூப் தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
TNPSC தேர்வு
தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வுகள் மூலம் தேர்வு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியிடங்களை நிரப்பும் பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் TNPSC தேர்வுகள் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வுகளை நடத்தாததால் பலரது எதிர்காலம் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவானது.
தமிழகத்தில் 3000 பேருக்கு தலா 10,000 ரூபாய் நிவாரணத் தொகை – முதல்வர் அறிவிப்பு!
இந்நிலையில் TNPSC தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என சட்டசபை பேரவையின் போது முதல்வர் முக ஸ்டாலின் தகவல் அளித்துள்ளார். அதாவது அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது தற்காலிக பணி நீக்கம் செய்வது தவிர்க்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ள நிலையில் TNPSC தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தமிழக அரசுப் பணியாளர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர்!
ஆசிரியர்களின் போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் வாபஸ் செய்யப்படும். அரசுப் பணியில் சேர்பவர்கள் மற்றும் பதவிக்காக காத்திருப்பவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அடுத்த ஆண்டு முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.