பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர்!
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் ஆடி மாத விழாவை முன்னிட்டு கோயில்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் விழாக்காலங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நர்சிங் கல்லூரி தற்காலிகமாக மூடல் – பேராசிரியர், மாணவர்களுக்கு கொரோனா தொற்று!
அதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று நாமக்கல் மாவட்டத்தில் சமய விழாக்களின் போது, கடைப்பிடிக்க வேண்டிய அரசின் விதிமுறைகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய ஆட்சியர் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட கட்டுப்பாடுகள் – முதல்வர் விளக்கம்!
இந்த நாளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடுவர். இதனால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும். அதனால் இந்தாண்டு பொது இடங்களில் சிலைகளை வைக்கவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கு மாறாக தனி நபராக சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனி நபர்கள் விநாயகர் சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ, சுற்றுப்புறத்திலோ வைத்து செல்லலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.